நாட்டை ஒருவர் ஆளுங்கள் முன்னாள் ராஜாவின் அதிரடி கட்டளை!

நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு ஆற்றும் சேவைதான் என்ன? இரண்டு தரப்பினரும் என்ன சேவைதான் மக்களுக்கு செய்கின்றார்கள்.

அதைத்தான் முன்னதாகவே கூறியிருந்தேன். ஒன்று ரணிலிடம் இந்த அரசாங்கத்தை கொண்டு நடத்து என ஒப்படைக்க வேண்டும்.

அல்லது ஜனாதிபதி இந்த ஆட்சியை பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரணில் சொல்வதனை ஜனாதிபதி கேட்பதில்லை ஜனாதிபதி சொல்வதனை ரணில் கேட்பதில்லை.

மைத்திரி ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


Comments