கொடூர விபத்து: இரண்டு பெண்கள் பலி – குழந்தை காயம்!
கல்கிரியாகம – புப்போகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் சிறிய குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளையில் இருந்து பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி இரு பெண்களை மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது 24 வயது இளம் பெண் மற்றும் அவரது தாயார் உயிரிழந்துள்ளமையுடன் அவரது குழந்தை காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
காயமடைந்துள்ள குழந்தை தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கெப் ரக வாகனத்தின் சாரதி கல்கிராயகம காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளையில் இருந்து பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி இரு பெண்களை மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது 24 வயது இளம் பெண் மற்றும் அவரது தாயார் உயிரிழந்துள்ளமையுடன் அவரது குழந்தை காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
காயமடைந்துள்ள குழந்தை தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கெப் ரக வாகனத்தின் சாரதி கல்கிராயகம காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Comments
Post a Comment