இலங்கை அணி வலைப்பயிற்சியில் மலிங்க ! நாளைய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு ...


.

நாளை இடம்பெறவுள்ள அவுஸ்ரேலியாவுக்கு எதிரான t20 போட்டி இலங்கை அணி நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டில்சானின் கடைசி சர்வதேச போட்டியாகும்.

இந்த போட்டியில் இலங்கை அணி ஏப்படியாவது வெற்றிபெறும் நோக்கில் களமிறங்கும் நிலையில் இன்று ஆர் பிரேமதாச கிரிக்கட் மைதானத்தில் வலை பயிற்ச்சியில் ஈடுபட்ட இலங்கை அணியுடன் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.


நாளைய போட்டி டில்ஷானின் இறுதி போட்டி என்பதால் அழைப்பு விடுக்கப்பட்டால் தான் அவருக்காக தனது காயத்தையும் பொருட்படுத்தாது விளையாட  தயார் என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நாளைய போட்டியில் அவருக்கு இலங்கை கிரிக்கட் நிறுவனம் அழைப்பு விடுக்கும் என தெரிகிறது....


Comments