தமி­ழீ­ழத்­திற்­கான புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து விமல்!

வடக்கு – கிழக்கை இணைத்து தனி தமி­ழீ­ழத்­திற்­கான கனவை நன­வாக்கும் தேசிய மற்றும் சர்­வ­தேச பிரிவினை வாதிகளின் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சிகள் தீவி­ர­மாக முன்னெடுக்கபடுகின்றன.

இதனை தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான விமல் வீர­வன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டை காட்டிக் கொடுக்கும் அர­சி­ய­ல­மைப்­பையும் சக்­தி­க­ளையும் தோல்­வி­ய­டைய செய்­வ­தற்கு நாட்டு மக்கள் பேதங்­களை மறந்து போராட வேண்­டிய காலம் வந்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்­சியின் ஊடக சந்­திப்பு பாரா­ளு­மன்­றத்தின் குழு அறை நான்கில் நேற்று புதன்கிழமை இடம்பெற்­றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச மேற்­கண்­ட­வாறு தெரி­வித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விஜ­யத்தின் போது பல்­வேறு விடயங்கள் குறித்து தனது அதி­கா­ரங்­களை மீறிய வகையில் செயற்­பட்டுள்ளார்.

ஆனால் அர­சாங்கம் அவ­ரது வரு­கைக்கு முன்னர் காணாமல் போன­வர்கள் அலு­வ­ல­கத்­திற்­கான சட்ட மூலத்தை நிறை­வேற்­றி­ய­துடன் , புதிய அர­சி­ய­ல­மைப்பை நவம்பர் மாதம் கொண்டு வரு­வ­தா­கவும் தக­வலை கசிய விட்­டது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு விடயம் குறித்து அர­சாங்­கத்தின் தக­வல்­களின் பின்­ன­ணியில் மேற்­கு­லக பிரிவினை வாதிகளே உள்ளனர்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­பது மேற்­கு­லக நாடு­களின் தயா­ரிப்­பாகும். மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசேன் மற்றும் சம்­பந்தன் உள்­ளிட்ட பிரி­வி­னை­வா­தி­களின் சக்­தி­களின் தேவையே புதிய அரசியல் அமைப்பின் நோக்­க­மாகும்.

இலங்­கையை துண்­டாடி வடக்கு, கிழக்கை இணைத்து தமி­ழீழம் அமைக்கும் திட்­டத்தை தடுக்க மக்கள் திரள வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Comments