இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை?

நாட்டின் மின்சார துறையில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தை நிறுத்த தீர்மானித்துள்ளமையினாலே இந்த நிலை ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த தீர்மானத்தால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த 500 மெகாவற் மின்சாரம் கிடைக்காமல் போகுமேன அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் அனல் மின்நிலையத்திற்கு பதிலாக வேறு மின் உற்பத்திக்காவது செல்ல வேண்டுமெனவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் மின்சாரம் இன்றி இலங்கை இருளில் மூழ்கும் ஆபத்தில் உள்ளதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments