கொழும்பு மக்களின் கவனத்திற்கு!

கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால்,  குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி பொதுமக்களை தேசிய நீர்வடிகாலமைப்பு மற்றும் நீர்வள சபை கேட்டுள்ளது.

தென், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீர் பாவனைக்கு சமகால வறட்சியான காலநிலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி நீர் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீரை சிக்கனமாக பயன்ப்படுத்த முற்படாவிடின் நீர்வெட்டினை எதிர்நோக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments