கிளிநொச்சியில் கசிப்பு களஞ்சியம் கண்டுபிடிப்பு!

பதினோரு பெரல் கோடா மற்றும் நாற்பது போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு காச்சுவதர்கான உபகரணங்களுடன் கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்புப் பொலிசாரால்  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம் வெலிகண்ண என்பவரின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட பொலிஸ் மது ஒழிப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மாவட்ட பொலிஸ் மது ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என் ஜெயவர்த்தன தலைமையிலான குழுவினர் நேற்றுக் காலை ஒன்பது மணிமுதல் மாலை நான்கு மணிவரை விஸ்வமடு பிரமந்தனாறு குளப்பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டனர்.

சோதனையின் போது குறித்த பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேகநபர்களையும் அவர்கள் வசமிருந்த பதினோரு பரலில் இருந்த இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பத்தெட்டு போத்தல் கோடா ,நாற்பது போத்தல்கசிப்பு மற்றும் கசிப்பு காச்சுவதர்கான உபகரணங்கள் என்பவற்றினையும் கைபற்றி உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை இன்றையதினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் மது ஒழிப்புப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments