ஒரு கோடியுடன் மற்றுமொரு வர்த்தகர் மாயம்!

வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வர்த்தகரின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பண்டாரகம, அடுலுகம பிரதேசத்திலிருந்து வங்கி நகை ஏலவிற்பனை ஒன்றுக்கு சிலருடன் சென்ற முஹம்மட் நஸ்ரின் (35) என்னும் வர்த்தகரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் ஹோட்டல் ஒன்றில் தங்கி ஏலவிற்பனைக்கு சென்ற குறித்த வர்த்தகரிடம்  சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் காணப்பட்டதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments