நுவரெலியாவில் இளைஞர் ஒருவர் தற்கொலை!

நுவரெலியா, பொரலந்தை, பீட்ரூ தோட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த பகுதி தோட்டத்தின் கிணற்றில் குதித்து இந்த இளைஞன் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த தோட்ட மக்களினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இளைஞனின் தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயது மதிக்கத்தக்க சரதீஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments