புத்தளம் புதுமணத்தம்பதிகளின் கார் தண்ணீரில் பாய்ந்தது.

புத்தளம், பிரதேசத்தைச் சேர்ந்த புதுமணத்தம்பதிகள், திருமணக் காரில் ஹோட்டலிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது நாத்தாண்டிய ஹமில்டன் வாவிக்குள் அந்தக் கார் விழுந்து விபத்துக்குள்ளானது.

 நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுமணத்தம்பதிகளுக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments