வெளிநாட்டுக்கு தொழில் புரிய செல்வோரின் ஆகக்குறைந்த சம்பளத்தொகை அதிகரிப்பு..



வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையில் பணியாளர்களுக்கு ஆகக் குறைந்த ஊதியமாக 300 டொலர்கள் வழங்கபட வேண்டும் என்ற புதிய சட்டத்தை எதிர்வரும் ஜனவரியில் இருந்து அமுல்படுத்தப்போவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

ஏற்கனவே இது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இழுபறி நிலையிலே உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.


Comments