தடையாக இருப்போர் யார் என்பதனை ஜனாதிபதி வெளியிட வேண்டும்!

புகையிலை பொருட்கள் மீதான வரியை 90 வீதமாக அதிகரிக்கும் தீர்மானத்திற்கு தடையாக இருப்போர் யார் என்ற தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இந்த கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு அனுமதிபெறும் வகையிலானெ யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் அதனை அங்கு நிறைவேற்ற முடியாமைக்கு காரணமென்ன என்பதனையும் அதற்கு தடையாக இருப்பவர்கள் யார் என்பதனையும் அவர் வெளியிட வேண்டுமென அந்த இயக்கம் கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments