மஹிந்தவின் காலை வாரப்போகும் மற்றுமொறு கறுப்பு ஆடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மிகவும் நெருங்கியவரும் கூட்டு எதிர் கட்சியின் முக்கிய புள்ளியுமான குமார வெல்கம அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் இறக்குமதியில்  ஏற்பட்டதாக கூறப்படும் 200 போடி ரூபா பெறுமதியான ஊழல் தொடர்பான விசாரனைகள் நிறுத்தப்படும் பட்சத்திலேயே இவர் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இவர் சுதந்திரக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவுடன் இரகசிய பேச்சுவார்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும்

துமிந்த திஸாநாயக்க ஜனாதிபதியுடன் கலந்துறையாடி விரைவில் அறிவிப்பதாக கூறியுள்வுளதாகவும்ம  தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments