இலங்கை தமிழர்களை மறந்த செய்ட் அல் ஹூசேன்!

இன்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் ஆரம்ப உரையை நிகழ்த்திய மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன்  இலங்கை குறித்து  எதனையும் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பல வந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு  தமது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இன்று அதற்கு இலங்கை பதிலளித்துள்ள சூழலிலும் அது தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் செய்ட் அல் ஹூசேன் குறிப்பிடவில்லை.

இன்றைய உரையில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த  செய்ட் அல் ஹூசேன்  பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து  சுட்டிக்காட்டியிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments