Skip to main content

இந்திய பிரஜைகள் ஏழு பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு



சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, இந்திய பிரஜைகள் ஏழுபேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பிலான விசாரணை இன்று (13) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் பிறப்பித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் குற்றச்சாட்டு மனுவை விரைவில் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதவான் இதன்போது.

Comments