Skip to main content
எவன்காட் தலைவர் அதிரடி கைது!
மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வன்மையாக கண்டித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட குறித்த தாக்குதல் குறித்து அந்நாட்டு அரசாங்கமும் வருத்தம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மலேசிய விஜயத்தின்போது இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment