‘பொலிஸார் தவறினால் எனக்கு அழையுங்கள்’ – 0718592020



smartphone-hands1
பொதுமக்கள் வழங்கும் மிகவும் முக்கியமான முறைப்பாடுகளுக்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவார்களாயின், அது தொடர்பில் தனது தனிப்பட்ட அலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நேற்றுச் சனிக்கிழமை (08) அறிவித்துள்ளார்.
ஏதாவது முக்கியமான விடயங்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம், நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது என, பொது மக்கள் எண்ணினால், 0718592020 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்..

Comments