100 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பம்!

இன்று தேசிய மர நடுகைத் தினத்தை முன்னிட்டு 100 கோடி கிளிசீறியா மரக்கன்றுகளை நடும் திட்டம் ஆரம்பமாகிறது.

முதலாவது மரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுவார்.

இது தொடர்பான வைபவம் இன்று திருகோணமலையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

இலங்கையில் சுற்றாடல் நேய கொள்கைகளின் அடிப்படையில் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். சிங்கப்பூர் முன்னுதாரணமோ, அபிவிருத்தியடைந்ததாகக் கூறப்படும் நாடுகளின் அபிவிருத்தி மாதிரிகளோ இலங்கைக்குப் பொருந்த மாட்டாதென ரத்ன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிசீறியாவின் மூலம் உயிரியல் நைதரசனைப் பெறமுடியும் என கலாநிதி ஜயந்த குணதிலக குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாவரத்தைப் பயன்படுத்தி அனல் மின் வலுவை உற்பத்தி செய்வதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும் அவர் தெரிவித்தார்.


Comments