11 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுவர்கள்!

திருகோணமலை ஜமாலியா கடற்கரையில் நின்று கொண்டிருந்த   11 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களான இரண்டு சிறுவர்களும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஜமாலியா  சிறுவனை குழுவாக சேர்ந்து சிலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

Comments