திருகோணமலை இறக்கக்கண்டி பிரதேசத்திற்கு 12 மில்லியம் ரூபா பெறுமதியான கார்பெட் வீதி
நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான் ரவூப் ஹக்கீமின் அமைச்சினாலும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் ஏற்பாட்டினாலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர் .எம் .அன்வர்,சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் மற்றும் உயர் பீட உறுப்பினர் அன்சார் ஹாஜியார் ஆகியோரின் பங்கு பற்றுதலுடனும் 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான செலவில் கார்பெட் வீதியின் வேலைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை 16.10.2016 மாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இறக்கக்கண்டி பிரதேசத்திலுள்ள அதிகமாக மக்கள் பயன்படுத்தும் வீதிகளே இவ்வாறு காபெட் வீதியாக மாற்றமடையவுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள வீதிகள் புனரமைக்கப்படாது நீண்ட காலமாக குறைபாடுகள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment