2017 எப்ரல் மாதத்துக்குள் வசீம் தாஜுதீன் வழக்கை நிறைவு செய்யப் பணிப்புரை

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் கொலை  வழக்கை எதிர்வரும் 2017 ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவு செய்யவேண்டும் என பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்‌ஷவின் புதல்வர் கைதுசெய்யப்பட்டுவார் என கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக மிகத் தீவிரமாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தாஜுதீனின் சடலத்தின் உடற்கூறுகளை காணவில்லை என குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் தரப்பு தாஜுதீன் வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிவுக்கு கொண்டுவர நீதிபதி திணைக்களத்துக்கு  பணிப்புரை வழங்கிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments