50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஒவ்வாமை காரணமாக கேகாலை ஹெட்டிமுல்ல பண்டாரநாயக்க மஹா வித்தியாலயத்தின் 50 மாணவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வாமை காரணமாக மேலும் பல மாணவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக கேகாலை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்கள் தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை பாரதூரமானதாக இல்லை என அந்த பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Comments