கல்ஹின்னையில் சுமுக நிலை நல்லிணக்கத்துக்கு குழு நியமனம்


.
kalhinna6
கல்­ஹின்­னையில் கடந்த மாதம் இரு சமூ­கங்­க­ளுக்கு இடையில் உரு­வான முறுகல் நிலை தற்­போது சுமு­க­மான நிலைக்குத் திரும்­பி­விட்­ட­தா­கவும் சமா­தா­னத்­தையும் சக­வாழ்­வையும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு கல்­ஹின்­னையில் 11 பேர் கொண்ட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கல்­ஹின்னை ஜம்­மி­யத்துல் உலமா சபைத் தலைவர் ஏ.என். சக்கி மொஹமட் (ரப்­பானி) தெரி­வித்தார்.
இந்த 11 பேர் கொண்ட குழுவில் ஜம்­மி­யத்துல் உல­மா சபை, ஜும்ஆ பள்­ளி­வாசல், ஜம்­மி­யத்துல் பத்தாஹ் அரபுக் கல்­லூரி என்­ப­ன­வற்றின் பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­கி­யுள்­ளனர்.
இக்­குழு ஊரில் இளை­ஞர்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்து வரு­கி­றது.

சமூ­கங்­க­ளுக்கு இடையில் ஒற்­றுமை, நல்­லி­ணக்கம் என்­பன தொடர்பில் அதிக கவனம் செலுத்­தி­வ­ரு­கி­றது என்றும் அவர் கூறினார்.
இதே­வேளை கல்­ஹின்னை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் ஜும்ஆ பிர­சங்­கங்­களும் சமூக ஒற்­றுமை, நல்­லி­ணக்கம் என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நிகழ்த்­தப்­ப­டு­கின்­றன.

கல்­ஹின்­னையில் இரு சமூ­கங்­க­ளுக்கு இடையில் முறுகல் நிலை கடந்த செப்­டெம்பர் மாதம் 14 ஆம் திகதி இரவு ஏற்­பட்­டது.
கல்­ஹின்­னை­யி­லுள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான கடையில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இருவர் சிகரட் கேட்­ட­போது சிகரட் விற்­பனை செய்­வ­தில்லை என்று தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே அங்கு முறுகல் நிலை உரு­வா­னது.

அன்று இடம்­பெற்ற கைக­லப்பில் மூவர் காயங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இரு தரப்­பிலும் 10 பேர் சந்­தே­கத்தின் பேரில் அங்­கும்­புர பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு பின்பு பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர்.
செப்­டெம்பர் மாதம் 27 ஆம் திகதி இச் சம்­பவம் தொடர்பில் மேலும் மூவர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர்.
சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் ஹஜ் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமுக்கு அறிவிக்கப்படவே அவர் நாடு திரும்பி சமா­தான முயற்­சி­களை மேற்­கொண்டார்.

அங்­கும்­புர பொலிஸ் நிலை­யத்தில் இரு தரப்­பி­ன­ருக்கு இடை­யி­டை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
இதேவேளை, இது ஒரு இனவாத செயலல்ல. மதுபோதையில் இருந்த இருவரால் உருவான கைகலப்பே.
இதனை பெரிதுபடுத்த வேண்டாமென அங்கும்புர இஹலமுல்ல பன்சலை விகாராதிபதி சுகுன குணவன்ச தேரர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


Comments