வடக்கில் காட்டும் அக்கறை கிழக்கில் மறுக்கப்படுகிறது- அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றில் உருக்கமான உரை !

மக்களின் காணிப் பிரச்சினை குறித்து பாராளுமன்றில் அமைச்சர் ஹக்கீம் 
காணி  விடு­விப்பு  விவ­கா­ரத்தில் அர­சாங்­கத்தால் வடக்கில்  காட்­டப்­ப­டு­கின்ற  அக்­கறை கிழக்­கிற்கு மறுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கற்­றுக்­கொண்ட பாடங்கள்   மற்றும்  நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களும் இவ்­வி­ட­யத்தில் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

இவ்­வாறு  பய­ணித்தால் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது கடி­ன­மா­ன­தா­கவே அமையும் என்று  நீர்­வ­ழங்கல் மற்றும் நக­ர­திட்­ட­மிடல்  அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரி­வித்தார்.

2006 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்­ட­ பற்­றைக்­கா­டு­களை பாது­காத்தல் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிரதி பல­னையே இன்று காணி  விவ­கா­ரத்தில் பெரும்  பிரச்­சி­னை­யாக  அனு­ப­வித்து வரு­கிறோம் என்று  கூறினார்.

பரா­ளு­மன்­றத்தில் நேற்று  வியா­ழக்­கி­ழமை அமர்வின் போது அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­வினால் முன்­வைக்­கப்­பட்ட காணி கொள்­ளுதல்  சட்­டத்தின் கீழான  கட்­ட­ளை­களை  நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான  விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹக்கீம்  மேற்­கண்­ட­வாறு  தெரி­வித்தார்.

இங்கு அவர்  தொடர்ந்தும் கூறு­கையில்;
புதிய அர­சியல்  யாப்பு ஒன்றை உரு­வாக்கி அதனை இந்த சபை­யிலே அங்­கீ­க­ரித்துக் கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம்   நெருங்கி வரு­கின்ற நிலையில் நாட்­டி­லுள்ள  காணிப்­பி­ரச்­சி­னைகள் தொடர்­பிலும்  அர­சாங்கம் கவ­னத்தை செலுத்தி வரு­கின்­றது.

தேசிய காணி ஆணைக்­குழு ஒன்றை  அர­சியல் யாப்பில்  உள்­வாங்­கி­யி­ருந்தும்  அவ்­வி­சா­ர­ணைக்­குழு  ஸ்தாபிக்­கப்­ப­டா­தி­ருக்­கின்­ற­மையே இப்­பி­ரச்­சினை நீண்­டி­ருப்­ப­தற்­கான பிர­தான கார­ண­மாகும்.

நாட்டில்  பற்­றைக்­கா­டு­க­ளாக அறி­யப்­பட்ட காணி­களை  பாது­காக்கும் பொருட்டு 2006 ஆம்  ஆண்டில்  வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்று  பிர­க­டனம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து, வன­ப­ரி­பா­லன சபை­யா­னது இவ்­வா­றான காணி­களை தன்­வ­சப்­ப­டுத்திக் கொண்­டது.

மேற்­படி வர்த்­த­மானி அறி­வித்­தலின் பலா­ப­ல­னையே  இன்று நாம் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கிறோம்.

காணிப்­பி­ரச்­சினை என்­பது  அம்­பாறை மாவட்­டத்தில் அதி­க­ரித்து காணப்­ப­டு­கி­றது.  வட்ட மடு காணிப்­பி­ரச்­சினை பாரிய பிரச்­சி­னை­யாக இருந்து வரு­கி­றது. அதே­போன்று  அண்­மையில் அஷ்ரப் நகரில் காணிப்­பி­ரச்­சி­னையை  முன்­னி­லைப்­ப­டுத்தி போராட்டம் ஒன்றும்  நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

கிழக்­கிலே சில பிர­தே­சங்­களில் பொது­மக்­க­ளுக்கு  சொந்­த­மான காணி­களை  இரா­ணு­வத்­தினர் ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கின்­றனர்.

இவ்­வாக்­கி­ர­மிப்­புக்கு மத்­தியில் அங்கு பெண்­களும்  பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுடன் வாழ்ந்து வரு­கின்­றனர்.

வலி­காமம் வடக்கில் காணி விடு­விப்பு இடம்­பெ­று­கி­றது. இது வர­வேற்­கக்­கூ­டிய  விடயம்  அர­சாங்கம் என்ற வகையில் இதனை செய்­தே­யாக வேண்டும். இதற்­காக நாம் மகிழ்ச்­சி­ய­டை­வ­துடன் அர­சாங்­கத்­துக்கு நன்­றி­யையும்  தெரி­வித்துக் கொள்­கிறோம். எனினும் காணி­வி­டு­விப்பு விவ­கா­ரத்தில் அர­சாங்கம்  வடக்கில்  காட்­டு­கின்ற  அக்­க­றையை கிழக்­கிலும் காட்ட வேண்டும் என்றே  வலி­யு­றுத்­து­கிறோம்.

நாட்டில்  பல இடங்­களில் மக்­க­ளுக்கு  சொந்­த­மான காணிகள் படை­யி­னரால் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. பயிர்ச்­செய்­கை­யிலும் ஈடு­ப­டு­கின்­றனர்.

முகாம்கள்  அமைக்­கப்­ப­டு­கின்­றன.

எனவே  பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான  காணி­களில் அமையப் பெற்­றுள்ள  முகாம்கள்  நீக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்த விரும்­பு­கிறேன்.

முசலி பிர­தேசம் இன்று கடற்­ப­டைக்கு சொந்­த­மான முகாம் பிர­தே­ச­மாக  மாறி­யி­ருக்­கி­றது.

நல்­லாட்­சி­யிலும்  இவ்­வாறு  மக்­களின்  காணிகள்  படை­யி­னரால் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தையும் ஆக்கிரமிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. காணி விவகாரத்தில் இவ்வாறான  நடவடிக்கைகள் முன்னெடுப்புகள் பொருத்தமற்றவை.  மக்களின்  வாழ்வாதாரக் காணிகள் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்படவேண்டும்.

கற்றுக்கொண்ட  பாடங்கள்  மற்றும்  நல்லிணக்க ஆணைக்குழுவின்  பரிந்துரைகள்  இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு பயணித்தால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்  என்பது  கடினமானதாகிவிடும் என்றார்

Comments