வித்தியா கொலை:சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று  ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 12 சந்தேகநபர்களும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Comments