யாழ் மாணவர்களுக்காக சென்னை இலங்கை தூதரகம் திடீர் முற்றுகை!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மே 17 இயக்கத்தினர் இன்று முற்றுகையிட்டுள்ளனர்  யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் மரணம் தொடர்பில் பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments