மின்வெட்டு நேர அட்டவணையினை வெளியீடு!

இலங்கையில் 3 மணித்தியால மின்சார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சாரசபை இதனை தெரிவித்துள்ளது.

பல பிரதேசங்களில் இன்று முதல் மின்சார விநியோகத்தடை அமுலுக்கு வருவதாக மிசாரசபை மேலும் கூறியுள்ளது.

இதன்படி காலை வேளையில் இரண்டரை மணித்தியாலங்களும் இரவில் ஒரு மணித்தியாலமும் மின்சார தடைப்படும்.

அதற்கமைய காலை 8 மணிமுதல் 10.30 வரைக்கும் இரவு வேளையில் 6 மணிமுதல் 10 மணிக்குள் ஒருமணித்தியாலமும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அறிவித்துள்ளது.

உரிய மழைவீழ்ச்சி இன்மையாலும், நுரைச்சோலை அனல்மின்சார நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை ஆகியவையே இதற்கான காரணங்கள் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments