நாடாளுமன்றிற்கு வருகின்றது ‘வற்’ திருத்தச் சட்டமூலம்!

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீண்டும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலம் ஏற்கனவே ஒரு தடவை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோதிலும், குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு காணப்படுவதாக உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், குறித்த சட்டமூலம் மீள திருத்தப்பட்டு அண்மையில் அதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்த நிலையில், இன்று குறித்த சட்டமூலம் மீண்டும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எனினும், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே குறித்த திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாக கூட்டு எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றில் அதுகுறித்து கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த விஹாரைகள் மற்றும் தேரவாத பிக்குகள் சட்டமூலம் என்பன ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments