மக்களின் உணர்வுகள் பற்றி அறிவித்த புலனாய்வுப் பிரிவு!

இந்த நாட்டு மக்களின் உணர்வுகள் பற்றி புலனாய்வுப் பிரிவினர் தனக்கு அறிவித்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நிலைப்பாடு புலனாய்வுப் பிரிவினர் ஊடாக அறிந்து கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வரகாபொல பிரதேசத்தில் பாரிய மலையொன்று வெட்டப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தமக்கு தகவல் வழங்கியதாகவும் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை குறித்து பிரதேச மக்கள் ஜனாதிபதி மீது அதிருப்தி கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தமக்கு தகவல் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments