ஜனாதிபதிக்கு கோபம் வருவது ஆச்சரியமானதல்ல!

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிறுவனம் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் நாளுக்கு நாள் தாமடைவதைக் கண்டு ஜனாதிபதிக்கு கோபம் வருவது ஆச்சரியமானதல்ல என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை பன்னிப்பிட்டி பாதையிலுள்ள அக்கட்சியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அந்த கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்திலுள்ளவர்கள், பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு கொண்டுவருவதில் காட்டும் ஆர்வத்தை, பாரிய ஊழலில் ஈடுபடும் திருடர்களைப் பிடிப்பதில் காட்டாதுள்ளனர்.

இந்த விடயத்தில் பொது மக்களும் அதிருப்தியில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments