மன்னார் பள்ளிவாசல்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு

மன்னார், அடம்பன், பள்ளிவாசல்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் குலபாஉர் – ராஷிதீன் பள்ளிவாசல் இன்று (14/10/2016) திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண மஜ்லிஸூஸ் ஷூராவின் தலைவர், மௌலவி எஸ்.எச்.எம்.ஏ.முபாரக் தலைமையில் இடம்பெற்ற இந்தத் திறப்புவிழாவில், பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியுதீன் பங்கேற்று, பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக வணக்கத்துக்குரிய பேராயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம் பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, இஷாக், மற்றும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், பொறியியலாளர் ஜௌபர் இஸ்மாயீல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Comments