இனவாதத்தை ஆயுதமாக்காதீர்!

நாட்டிலுள்ள அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள யாருக்கும் உரிமையுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதற்காக வேண்டி, இனவாதத்தை ஒர் ஆயுதமாக்க வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பொருளாதார, சமூக விவகாரம், கலாசார அம்சங்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாறாக, இந்த அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள, இனவாதத்தைத் தூண்ட வேண்டாம். அடிப்படை வாதத்தை தூண்ட வேண்டாம். பயங்கரவாதத்தை தூண்ட வேண்டாம். பிரிவினைவாதத்தைத் தூண்ட வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Comments