சிகை அலங்காரம் எனும் போர்வையில் மாணவியரை பயன்படுத்தி விபசாரம்
மட்டக்களப்பு நகரில் சிகை அலங்கார நிலையங்கள் என்ற பெயரில் மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவது தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகர் பகுதியில் சிகை அலங்கார நிலையங்கள் என்ற போர்வையில் சில இடங்களில் பாடசாலை மாணவிகளை பயன்படுத்தி விபசார நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாணவர்கள் பெற்றோர் மத்தியிலிருந்து கிடைத்த முறைப்பாட்டினையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment