பம்பலபிட்டியில் துணிக் கடையொன்றில் தீ

கொழும்பில் பம்பலபிட்டி ஹெவலோக் வீதியிலுள்ள துணிக் கடையொன்றில் நேற்றிரவு தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினரும் மற்றும் மின்சார சபையினரும் இணைந்து குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த தீயினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை  அறிவிக்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Comments