தற்கொலை செய்தவரின் உடல் பரிசோதனை!

லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கான பொறுப்பை ஏற்பதாகக் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த புலனாய்வுப் பிரிவு உறுப்பினரின் சடலத்தை, கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனை செய்தார்.

கேகாலை – கரடுபன பகுதியிலுள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட, இளந்தாரிகே எதிரிசிங்க ஜயமான்ன என்ற புலனாய்வுப் பிரிவு உறுப்பினரின் சடலம் புதைக்கப்பட்டு 5 நாட்களின் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமையவே அவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினரின் சடலம், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினால் பரிசோதிக்கப்பட்டது.

இந்த பரிசோதனையின் பின்னர் சடலத்தின் பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக, கொழும்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments