சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்  10 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு கடந்த முதலாம் திகதி அழைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments