யாழில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் இளவாளை பகுதியில் சுமார் 35 பொதிகளில் பொதியிடப்பட்ட கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை யாழ்.புலனாய்வுதுறை பொலிஸாரால் இவ்வாறு இந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாக்களின் மொத்த பெறுமதியும் நிறையும் கணக்கிடப்படவில்லை என புலனாய்வுத்துறை பொலிஸார் தெரிவித்ததுடன் அதற்கான நடவடிக்கைகள் தற்போது மெற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Comments