சவூதியில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இனி ஆபத்து இல்லை!

சவூதியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளிகளின் நலன்களுக்காக சிறப்பு தனி நீதிமன்றங்கள் இந்த வருட இறுதிக்குள் ஜெத்தா, ரியாத், தம்மாம், மக்கா மற்றும் மதினா ஆகிய இடங்களில் அமையவுள்ளதாக நீதித்துறை அமைச்சர் வலீத் அல் சமானி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஜுடிசியல் கவுன்சில் நீதிமன்றங்களே தொழிலாளர் சம்பந்தப்பட்ட விவகாரங்களை கையாண்டு வந்த நிலையில், இனி தனி நீதிமன்ற நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். இதற்காக சுமார் 99 துணை நிலை நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டடு தொழிலாளர்களுக்கான வழக்குகளை கையாளுவதற்கான சிறப்பு பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 80 நீதிபதிகள் உடனடியாக நீதிமன்றங்களில் பொறுப்பேற்கவுள்ளனர்.

இதனால் சவூதியில் பணிபுரியும் எம்மவர்களுக்கு இனி பாதுகாப்பு அதிகமாகும் என எதிர்பார்க்க முடியும்…

எமது உறவுகளுக்காக இத்தகவலை உடனடியாக பகிருங்கள்…

Comments