ஜனாதிபதிக்கு ஊழல்வாதிகளை பாதுகாக்கும் எண்ணம் இல்லை!
ஊழல் செய்தவர்களை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கவில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இராணுவ அதிகாரிகளை விசாரிக்கும்போது அவர்களை ஏளனப்படுத்த வேண்டாம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தனக்கு அறிவிக்குமாறுமே ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே ஜனாதிபதியின் முழுமையான பேச்சை கேட்காமல் விமர்சிக்க முனைவது சரியானது அல்ல .
மேலும் சுயாதீன ஆணைக்குழுக்கள் சரியான முறையில் செயற்படவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.
ஆனால் ஒரு சிலர் இந்த விடயத்தை பயன்படுத்தி அரசியல் சுயலாபம் அடைய முயற்சிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலைமை தொடர்பாகவே அமைச்சர் சமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் நிகழ்த்திய உரையை சில ஊடகங்கள் முழுமையாக வெளியிட வில்லை. ஒருசில விடயங்களை மட்டும் வெளியிட்டமையினால் சிலர் விமர்சிக்கின்றனர்.
ஆனால் உண்மையில் ஊழல் செய்தவர்களை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கவில்லை. திருடியவர்களை பாதுகாக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு இல்லை. மாறாக இராணுவ அதிகாரிகளை விசாரிக்கும்போது அவர்களை ஏளனப்படுத்த வேண்டாம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தனக்கு அறிவிக்குமாறுமே ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அவருக்கு இந்த விடயங்கள் அறிவிக்கப்படவேண்டியது அவசியமாகும். எனவே ஜனாதிபதியின் பேச்சை முழுமையாக கேட்காமல் விமர்சிக்க முனைவது சரியானது அல்ல. சில ஊடகங்கள் ஜனாதிபதியின் பேச்சை சரியாக வெளியிடவில்லை.


Comments
Post a Comment