பௌசிக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

19.5 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய குற்றச்சாட்டிற்கமைய அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியை எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments