நாட்டில் இன்று முதல்  மின்சாரத் தடை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில நாட்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் இவ்வாறு மின் தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய  இன்று முதல்காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு மணித்தியாலங்கள் மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இடம்பெற்ற தொழிநுட்ப பிரச்சினையினால் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதனாலேயே இந்த மின்சார விநியோகத் தடை ஏற்படுத்தப்படுத்தப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

Comments