ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் உரையாற்றும் ஜனாதிபதி!

ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கலந்துகொள்ளவுள்ளார்.

34 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஊடகப் பணிப்பாளர் தர்ம ஸ்ரீ பண்டார ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வறுமை ஒழிப்பு என்பது இந்த மாநாட்டின் தொனிப் பொருள் எனவும், இந்த கருப்பொருள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 2017 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திப் பயணத்தின் இலக்குடன் ஒத்துச் செல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments