அமைச்சரின் மகன் பிணையில் விடுதலை!

கைதுசெய்யப்பட்ட அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் உட்பட இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆணமடுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் செலுத்திய ஜீப் ரக வாகனம் சைக்கிளொன்றில் மோதியதில் 42 வயதான நபரொருவர்  உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments