கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே நியமனங்களை நியமித்து தாருங்கள்: முதலமைச்சரிடம் ஆசிரியர்கள் வேண்டுகோள்


h99
கடந்த செவ்வாய்க்கிழமை(04) ந் திகதி தேசிய கல்வியற் கல்லுாரி ஆசிரியர் நியமனமானது கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.
இதனை தமது சொந்த மாகாணமான கிழக்கு மாகாணத்துக்குள் நியமனத்தை நியமித்து தருமாறு இன்று(06) நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் அவரது மாகாண அலுவலகத்தில் வைத்து வேண்டுகோள் விடுத்தனர்.
இவர்களில் மொத்தமாக 3225 பேர் நியமனம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மொழி மூலமானவர்கள் 1014 பேர்களாவதுடன் இதில் 194 பேரே சொந்த மாகாணத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் மிகுதி நியமனங்கள் மாகாணத்துக்கு வெளியில் நியமனம் பெற்றதால் இவர்களையும் கிழக்கு மாகாணத்துக்குள் நியமிக்குமாறு கோரிக்கை அடங்கிய மகஜர் மாகாண முதலமைச்சரிடம் கையளிக்ப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் தான் இது தொடர்பாக பிரதமர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் நானும் எமது மாகாண கல்வி அமைச்சரும் நாளை கொழும்புக்குச் சென்று கதைப்பதாகவும் முடிவினை சாதகமாக மாற்றி சொந்த மாகாணத்துக்குள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் முதலமைச்சர் கருத்து தெரிவித்தார்.
h-jpg2

Hasfar A Haleem

Comments