தோட்ட தொழிலாளர் சம்பள பேச்சுவார்ததை! தீர்வு கிடைக்குமா?
தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தின் சபை ஒத்திவைப்பு விவாத்தின் போது கருத்து வெளியிடப்பட்டது.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கோரி, இன்று தோட்ட தொழிலாளர்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்ந்து சென்றால் நாட்டில் தேயிலை தொழிற்துறை பாரிய பாதிப்பை எதிர்நோக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் பழினி திகாம்பரம், இலங்கையிலேயே தோட்ட மக்கள் அதிகம் வேலை செய்து குறைவான வேதனத்தை பெறுகிறார்கள்.
அதனால் அவர்களுக்கு நியாயமான வேதனத்தை வழங்க வேண்டும்.மறுபுறத்தே பெருந்தோட்ட கம்பனிகளை இல்லாது செய்ய முடியாது.
இவ்வாறு செய்தால் 2 லட்சம் பேர் அநாதரவாக வேண்டிய நிலை ஏற்படும்.அதனால் கம்பனியும் முன்னேறுவது போல் தொழிலாளர்களும் முன்னேறவேண்டும்.
ஆகவே நாம் அனைவரும் இணைந்து மக்களின் வேதன உயர்வை பெற்றுக்கெடுக்க வேண்டும்.நான் அமைச்சராக பதவியேற்றேன் என்பதற்காக மக்களின் போராட்டத்தை ஒரு போதும் காட்டிக் கொடுத்ததில்லை என அமைச்சர் திகாம்பரம் குறிப்பிட்டார்.
தோட்ட தொழிலாளர்களின் வேதனம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேதன பிரச்சினைக்கு விரைவில் நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.
கூட்டு ஒப்பந்தம் அன்றி, தோட்ட தொழிலாளர்களது வேதனம், சம்பள நிர்ணய சபையின் ஊடாக வழங்கப்பட்டு வந்திருக்குமானால் பெருந்தோட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்குமார் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் வழங்கும் வகையில் உரையாற்றிய தொழிலமைச்சர் ஜோன் செனவிரட்ன, இன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வுக்கு வந்துள்ளோம் என குறிப்பிட்டார்.
730 என்ற வேதனத்தை தம்மால் தரமுடியும் என்ற நிலைப்பாட்டிற்கு முதலாளிமார் சம்மேளனம் வந்துள்ளது.இதன்காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் இன்று முதல் வழமைக்கு திரும்புமாறு அவர் கோரியுள்ளார்.
பெரும்பாலான தொழிற்சங்க தலைவர்கள் இந்த தீர்மானத்திற்கு இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாத்தின் போது உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, தமது மக்கள் கூலியாட்களாக இருக்கும் நிலையில் தொழிற்சாலைகளை நிறுவியுள்ள தென்பகுதி மக்கள் முதலாளிமார்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
விவசாயத்தை ஊக்குவிக்க அரசாங்கம் நடடிவடிக்கை மேற்கொண்டாலே நாட்டில் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால அரசாங்கம் நாட்டு மக்கள் மீது பெருந்தொகையான கடன் சுமையை ஏற்றியுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ருப் குற்றம் சுமத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தை தொழிற்துறை அடிப்படையில் மாற்றாதவரைக்கும் இளைஞர்களில் தொழில்வாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கோரி, இன்று தோட்ட தொழிலாளர்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்ந்து சென்றால் நாட்டில் தேயிலை தொழிற்துறை பாரிய பாதிப்பை எதிர்நோக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் பழினி திகாம்பரம், இலங்கையிலேயே தோட்ட மக்கள் அதிகம் வேலை செய்து குறைவான வேதனத்தை பெறுகிறார்கள்.
அதனால் அவர்களுக்கு நியாயமான வேதனத்தை வழங்க வேண்டும்.மறுபுறத்தே பெருந்தோட்ட கம்பனிகளை இல்லாது செய்ய முடியாது.
இவ்வாறு செய்தால் 2 லட்சம் பேர் அநாதரவாக வேண்டிய நிலை ஏற்படும்.அதனால் கம்பனியும் முன்னேறுவது போல் தொழிலாளர்களும் முன்னேறவேண்டும்.
ஆகவே நாம் அனைவரும் இணைந்து மக்களின் வேதன உயர்வை பெற்றுக்கெடுக்க வேண்டும்.நான் அமைச்சராக பதவியேற்றேன் என்பதற்காக மக்களின் போராட்டத்தை ஒரு போதும் காட்டிக் கொடுத்ததில்லை என அமைச்சர் திகாம்பரம் குறிப்பிட்டார்.
தோட்ட தொழிலாளர்களின் வேதனம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேதன பிரச்சினைக்கு விரைவில் நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.
கூட்டு ஒப்பந்தம் அன்றி, தோட்ட தொழிலாளர்களது வேதனம், சம்பள நிர்ணய சபையின் ஊடாக வழங்கப்பட்டு வந்திருக்குமானால் பெருந்தோட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்குமார் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் வழங்கும் வகையில் உரையாற்றிய தொழிலமைச்சர் ஜோன் செனவிரட்ன, இன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வுக்கு வந்துள்ளோம் என குறிப்பிட்டார்.
730 என்ற வேதனத்தை தம்மால் தரமுடியும் என்ற நிலைப்பாட்டிற்கு முதலாளிமார் சம்மேளனம் வந்துள்ளது.இதன்காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் இன்று முதல் வழமைக்கு திரும்புமாறு அவர் கோரியுள்ளார்.
பெரும்பாலான தொழிற்சங்க தலைவர்கள் இந்த தீர்மானத்திற்கு இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாத்தின் போது உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, தமது மக்கள் கூலியாட்களாக இருக்கும் நிலையில் தொழிற்சாலைகளை நிறுவியுள்ள தென்பகுதி மக்கள் முதலாளிமார்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
விவசாயத்தை ஊக்குவிக்க அரசாங்கம் நடடிவடிக்கை மேற்கொண்டாலே நாட்டில் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால அரசாங்கம் நாட்டு மக்கள் மீது பெருந்தொகையான கடன் சுமையை ஏற்றியுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ருப் குற்றம் சுமத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தை தொழிற்துறை அடிப்படையில் மாற்றாதவரைக்கும் இளைஞர்களில் தொழில்வாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டினார்.


Comments
Post a Comment