சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

வாதுவ ரயில் நிலையத்துக்கு முன்னால் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நபர் 59 வயதானவர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை.

சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை அரம்பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments