பொதுத்துறை சேவைகளை கண்காணிப்பதற்கு விசேட பிரிவு!

பொதுத்துறை சேவைகளை கண்காணிப்பதற்கு அரசாங்கம் விசேட பிரிவு ஒன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய சட்டமொன்றின் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கு அமைய  உருவாக்கப்பட உள்ள இந்த நிறுவனம் தொடர்பிலான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள், வெளிப்படைத்தன்மை, வினைத்திறன் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கண்காணிக்கக்கூடிய வகையில் இந்த நிறுவனம் அமைக்கப்பட உள்ளதது.

சுயாதீனமான முறையில் இந்த நிறுவனம் இயங்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Comments