தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் ஊடகங்களுக்கு பிரதமர்!

ஊடகங்கள் தவறான வதந்திகளை மக்களிடையே பரப்புவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர்  இன்று பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் இருவர், உட்பட சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோர் கட்டணம் செலுத்தாமல், விமான படைக்கு சொந்தமான விமானங்களில் முறைகேடாக பயணம் செய்ததாக குற்றச்சாட்டுகள் பல ஊடகங்களில் அண்மையில்  வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கும்போது,

நாட்டில் ஊடகங்கள் உண்மைத்தன்மை அற்ற செய்திகளையும் வதந்திகளையும் மக்களிடையே பரப்பி வருகின்றது இவை நிறுத்தப்படவேண்டும்.

விமான படைக்கு சொந்தமான விமானங்களில் முறைகேடாக பயணம் செய்தமை தொடர்பில் கூறப்பட்ட கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் வதந்திகளே எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க பிரதமரின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,குறித்த விடயம் வதந்தியாக தெரியவில்லை, அவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருத்துகளை முன்வைக்கும் போது அவருடைய கருத்துகளை பிரதமர்  நகைச்சுவையாக  மாற்றியதை தொடர்ந்து அவரின் ஒலிவாங்கி சபாநாயகரால் நிறுத்தப்பட்டது.


Comments