வித்தியா படுகொலை வழக்கு எதிர்வரும் முதலாம் ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

வித்தியா படுகொலை வழக்கு எதிர்வரும் முதலாம் ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்டதையடுத்து இக் கொலை சம்பவம் தொடர்பில் பன்னிரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையானது ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது பன்னிரண்டு சந்தேகநபர்களும் சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர். தொடர்ந்து இவ் வழக்கு விசாரணையில் சந்தேகநபர்களது விளக்கமறியலை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை நீடித்துள்ளதுடன் அதுவரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கவும் நீதிவான் எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

Comments