மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி!

ரக்வான பிரதேசத்தில் மின் மாற்றியில் பராமரிப்பு வேலைத் திட்டத்தனை முன்னெடுத்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரக்வான – தெனியாய வீதியில் உள்ள திவி நெகும வங்கியின் அருகாமையில் உள்ள மின் மாற்றியினை பராமரிப்பு செய்யும் ஊழியரே இவ்வாறு மின்சார தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

பெல்மடுல்லை பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதுடைய நபரே மின்சாரம் தாக்கி இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுகத்துள்ளனர்.

Comments